தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழக்கப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று  மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜூன் 24ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.