தமிழகத்தில் நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் இந்த பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை சென்னை பாரிமுனையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.