கட்சியில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் எனவும் உலகாதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர், ஆட்சி எவ்வளவு முக்கியமோ அதை விட கட்சி முக்கியம். அனைவரின் கவனமும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் இருக்க வேண்டும். தொண்டர்களுக்கு குறைகள் இருந்தால் அவற்றை தீர்க்க வேண்டும். அவர்களிடம் ஆறுதலாக பேச வேண்டும்.

ஆட்சி வருவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டதோ அதைவிட அதிக உழைப்பு ஆட்சியை நடத்துவதற்கு தேவை. உழைப்பதற்கு நான் தயாராக உள்ளேன். என் சக்தியை மீறி நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். கட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி கூட்டங்கள் நடத்தப்பட்டன. கட்சியில் உழைப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.