தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் முதல் திருச்சி வரை கூடலூர் மற்றும் எலந்தகுழி போன்ற பகுதிகளில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

அவர் பேசியதாவது, அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் யாரும் நின்று பயணம் செய்யாத அளவுக்கு பாதுகாப்பு நலன் கருதி அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.