நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு ஆதர்ஷ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 1218 ரயில்வே நிலையங்களில் தற்போது மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 35 ரயில்வே நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகிறதாம். இந்த பணி அடுத்த வருடத்திற்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்தெந்த ரயில்வே நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி சென்னை கோட்டத்தில் சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, சென்னை சேத்துப்பட்டு, பெரம்பூர், தாம்பரம், குரோம்பேட்டை, ராயபுரம், பரங்கிமலை, கொருக்கு பேட்டை, ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, திருநின்றவூர், காஞ்சிபுரம், அரக்கோணம், மணவூர், செஞ்சி, பணம் பாக்கம் ஆகிய ரயில்வே நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மதுரை கோட்டத்தில் காட்பாடி, அவனீஸ்வரம், கூடல் நகர், கொட்டாக்கரை, புதுக்கோட்டை, பாம்பன், ராஜபாளையம், புனலூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி, தென்காசி, தேனி, கடையநல்லூர், சந்திப்பு, விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், குந்தாரா ஆகிய ரயில்வே நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் கோட்டத்தில் பீளமேடு, கோவை சந்திப்பு, சேலம், திருப்பூர், இருகூர், ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலையங்களும், திருச்சி கோட்டத்தில் திருவெறும்பூர், திருச்சி, கும்பகோணம், அரியலூர், மயிலாடுதுறை, நாகூர், புதுச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், விருத்தாச்சலம், வேலூர், கான்டோமெண்ட் ஆகிய ரயில் நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.