ஹரியானாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியேயும் சாலையிலும் நடந்த குடும்ப சண்டை தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் திரண்டதால், சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடப்பவை அனைத்தையும் அங்கிருந்தவர்கள் தங்கள் கைபேசிகளில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது இதுவே நெட்டிசன்களின் காரசார விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவருக்குத் தெரியாமல் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், மனைவி தனது காதலனைச் சந்திக்க ஓட்டலுக்குச் சென்றபோது, கணவர் மட்டுமன்றி அவரது தாய் மற்றும் சகோதரி என ஒட்டுமொத்தக் குடும்பமும் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளது. ஓட்டல் அறைக்குள்ளேயே மனைவியைக் காதலனுடன் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
A married woman was allegedly caught with another man at an OYO hotel in Sector 37, Faridabad, after her husband and family confronted them. pic.twitter.com/zzmF8XPdGR
— Pankaj (@Ragepkj) July 16, 2026
குடும்பத்தினரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கணவரிடம் சென்று கதறி அழத் தொடங்கினார். ஆனால், ஆத்திரமடைந்த மாமியாரும் நாத்தனாரும் அந்தப் பெண்ணை அறையிலிருந்து வெளியே இழுத்து வந்து சாலையில் வைத்துச் சண்டையிடத் தொடங்கினர். இந்த திடீர் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண்ணின் காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மாமியார் பெண்ணை இழுத்துச் செல்ல, அவர் தன்னை விட்டுவிடுமாறு கூறினார்.
இந்த வீடியோ ‘X’ பக்கத்தில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் அந்தப் பெண்ணின் செயலைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், “முழு பின்னணியும் தெரியாமல் ஒருவரை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு” என்றும் சிலர் கூறி வருகின்றனர். எவ்வாறாயினும், ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சனை இப்படி நடுரோட்டில் நாடகமாகி இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
