கரூர் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டார். அவரது 5-வது நாள் இறுதி சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வராஜின் பேரன் ஆட்டோ டிரைவரான ராஜேஷ்(32) என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் தாத்தாவிற்கு இறுதி சடங்கு செய்வதற்காக வாங்கல் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது ராஜேஷ் மணல் குழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ராஜேஷின் உடலை மீட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷுக்கு திருமணமாகி மனைவியும்,2 பெண் குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.