கரூர் மாவட்டம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாயகிருஷ்ணன், ஜீவானந்தம், தங்கராஜ், உதயராஜா, விக்னேஸ்வரன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.