செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் AC சண்முகம், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் செய்த சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்,  புதிய நிதி கட்சி ஒவ்வொரு சட்டமன்றத்திலும் நிர்வாகிகளினுடைய கூட்டத்தை முதன்முதலாக கூட்டி இருக்கின்றோம்….  ஜனவரி மாதம் கடைசியிலே ஆறு தொகுதியும் செயல் வீரர் கூட்டம் நடத்த முடிவு எடுத்து இருக்கின்றோம்…

ஜனவரி மாதம் முடிவிலே செயல்வீரர்களின் உடைய கூட்டம் பத்தாயிரம் பேர் கலந்து கொள்ளக்கூடிய அளவிற்கு நடத்தப்படும். ஆகவே இந்தத் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதற்காக  இந்த நிகழ்ச்சிகள் நடத்த இருக்கின்றோம். பாரத பிரதமர் செய்திருக்கின்ற சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் கூட்டம், அதை தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

பாரத பிரதமர் கடைசி சில தினங்களுக்கு முன்பாக கூட எண்ணி பாருங்கள்…..  41 பேர் 4500 கோடி திட்டத்தில் சுரங்கப்பாதை… அந்த சுரங்கப்பாதை செய்யும்போது….. அதில் இடிந்து நடுவிலே மாட்டிக் கொள்கிறார்கள்… அதை பத்திரமாக கொண்டு வர வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் இருந்து ஜாம்பவான்களையும், உலகத்தில் இருக்கின்ற அத்தனை செய்திகளையும் சேகரித்து….

இந்தியாவினுடைய அரசு… மத்திய அரசு 41 பேரை 17 நாட்கள் பொருத்து பத்திரமாக கொண்டு வந்த பெருமை பாரத பிரதமர் மோடிஜி அவர்களை சாரும்…. ஒரு சிறு அசம்பாவிதம் இல்லாமல் அது வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்….  அதேபோல நம்முடைய சந்திராயன் உடைய வெற்றியும் பாரத பிரதமருக்கு சேரும் என தெரிவித்தார்.