மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்டுவிட்டு சென்றது. தண்ணீரில் தத்தளித்து வரும் சென்னை மக்களுக்கு பல நல் உள்ளங்களும் உதவி செய்து வருகிறார்கள். அந்தவகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க புஸ்லி ஆனந்த் நல திட்ட உதவிகளை வழங்கினார். கடந்த 2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் பெய்த கனமழையால் பல குடியிருப்புக்கள் நீரில் மூழ்கி உள்ளது.

இதனால், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புஸ்ஸி ஆனந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.