புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சென்னை வெள்ள மீட்பு பணியில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே களத்தில் உள்ளதாகவும் திமுக அடிமட்ட தொண்டர்கள் களத்தில் எங்கும் காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் சென்னையில் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவினருடன் இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்தே நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.