பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பதாக திமுகவின் அதிகாரபூர்வ  நாளேடான முரசொலி குற்றம் சாட்டி உள்ளது.  நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கும் முரசொலி, ரூ.7,50,000 00 00 000 என்று குறிப்பிட்டு,  மோடி ஆட்சியில் மெகா ஊழல் என்று கூறியுள்ளது.

திமுக ஊடகமான  முரசொலி இவ்வாறான செய்தி வெளியிட்டதற்கு பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக VS பாஜக மோதல் தொடர்ந்து ஏற்பட்டுவரும் நிலையில், திமுக வைக்கும் வாதங்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு முறையும் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.