ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கண்ணன்.ஜி அவர்கள்  பேசும் போது,  சந்தில் சிந்து பாடுவானே சிந்து புருஷன். அந்த சொட்ட புகழ் மெயின் ரோடு குமாரு. உளறுகளை ஓயாமல் கொட்டித் தீர்ப்பானே  ஊத்த வாயன் உதவாக்குமார், விஞ்ஞானிகளே திகைப்பில் ஆழ்த்தி விஞ்ஞானத்திற்கு பாடம் சொல்லுவானே தெர்மாக்கோல் புகழ் நம்ம விஞ்ஞானி ராசு. செட் பண்றதையும், செட்டப் செய்வதையும் தன் பாரம்பரிய தொழிலாக இன்றுவரை செய்து வருகிறானே செட்டப் செல்லப்பா.

பூட்டுக்கு பெயர் போன ஊரை தன் லூசுத்தனத்திற்கு பெயர் போன ஊராக மாற்றினானே லூசு சீனி, நத்தத்தில் பிறந்து….  பித்தம் கலங்கி… சித்தம் சிதைந்து….  விசுவாசம் இல்லாமல் பிஸி பிசுக்கி நடக்கிறானே விசுவாசம் இல்லாத நாதன். இவர்களைப் போல் இன்னும் பல அரைகுறைகளை வைத்துக்கொண்டு இந்த எடுபுடியான், எட்டு தோல்வியான்… 

என்னதான் செய்து விடுவான்… எதைத் தான் சாதித்து விடுவான்… வாயைத் திறந்தால் வண்டி வண்டியாக புளுகு மூட்டைகளை புல்லரிக்காமல் ….அவிழ்த்து விடுகிறாளே வளராமதி… கோயபெல்ஸ் கொள்கைகளை கோட்பாடாகக் கொண்டிருக்கும் கோகுலத்தில் இந்திராக்களும்,  கோமனத்துக்குள் முந்திராக்களும் என்ன செய்து விடுவார்கள் ? எதை சாதித்து விடுவார்கள்?

வாய்கிளிய பேசுகின்ற வந்தேறிகளே..  நீங்கள் வாய் கிழிய பேசிய  பேச்சு நமக்கு புரியாததா ? உங்களுக்குத்தான் தெரியாததா ? ஒன்றான இயக்கத்தை, ரெண்டாக்கியவன், ரெண்டான இயக்கத்தை துண்டாக்கியவன்,  கட்சியைப் பிளந்தவன், நம் கழகத்தைப் பிரிந்தவன், அந்த சண்டாளனுக்கு, அந்த சதிகாரனுக்கு, மானமுள்ள மடையனுக்கு, வெட்கமெல்லாம் வேந்தனுக்கு ,ரோஷம் இல்லா ராசனுக்கு, சூடு இல்லாத செங்கலுக்கு, சொரணை இல்லா உங்களுக்கு , எழுச்சி எல்லாம் மூடனுக்கு, மகிழ்ச்சி இல்லா தொண்டனுக்கு, எழுச்சி மாநாடு ஒரு கேடா என கடும் சொற்களை பேசி கவிதை போல கொட்டி தீர்த்தார்.