ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் பேசிய போது, எங்க மாவட்ட கழக செயலாளர்,  நிர்வாகிகள் கூட்டத்தில் பண்ருட்டியார் கழக ஆலோசகர். தலைவரோடு பயணித்தவர். மூத்த தலைவர். அவர் சொல்லிட்டாரு 3ஆம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஓபிஎஸ் என்று…. இன்னைக்கு எல்லா ஊடகங்களும் வந்து இருக்கு.

அதுக்கு முதல் நாள் வரைக்கும், இந்த ஊடகங்கள் – செய்தித்தாள்கள் பிஜேபி ஓபிஎஸ்-ஸை  நிக்க வேண்டாம் என்று சொல்லிடுச்சு…. ஓபிஎஸ் நிக்க மாட்டாரு, சப்போர்ட் பண்ணுவாருன்னு எழுதிட்டு இருந்தீங்க…  இப்போ ஓபிஎஸ் அண்ணன்  40 இடத்துல நிக்க போறேன்னு சொல்லிட்டாரு. தேர்தலுக்கு பின்னால் I.N.D.I.Aவும் வரவேற்க்கும், NDAவும் வரவேற்கும்.

அதில் எதில் போவது என்பதை எங்கள் அண்ணன் முடிவு செய்வார் என்று சொல்லிட்டேன். ஆகவே இனி தமிழகத்தை பொறுத்தவரை பயங்கரமான தோல்வி முகம் தான் பிஜேபி,  பழனிசாமியோடு  போனால் ஏற்படும் என தெரிவித்தார்.