தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தாங்க. இப்பதான் வெளிய வந்து ஒரு வாரம் ஆகுது. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் இயக்கம். எல்லா தொண்டர்களும்.. தலைவர்களை விடுங்க…. தொண்டர்கள் நினைப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று சேரனும் என நினைக்கிறார்கள்.

பொதுமக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடிப்படை தொண்டர்கள், இந்த இயக்கத்தின்பால் பற்றும், பாசமும், பிடிப்பில் இருக்கின்ற தொண்டர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். சில பேரு அதை விரும்பவில்லை. அதனால்வே தொடர்ந்து தோல்வி. 10 தோல்வி. ஈரோடு மாவட்டம் கொங்கு பெல்ட். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. மாண்புமிகு அம்மா அவர்கள் சேவல் சின்னத்தில் தனியா நிற்கும் போதே அஞ்சு தொகுதி ஈரோடு மாவட்டத்தில் ஜெயித்தது.

நடைபெற்று முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணாமலை எங்களை வந்து பார்த்தார்.  கொங்கு பெல்ட்டு. நீங்க வாபஸ் வாங்குனீங்கன்னா… அண்ணா திமுக வெற்றி அடைய வாய்ப்பு இருக்கும்ன்னு சொன்னாரு. நாங்கள் ஏற்றுக் கொண்டோம். டி.டி.வி தினகரனையும் பார்த்தாரு. அவரும் ஏற்றுக்கொண்டார். ஜட்ஜ்மெண்ட் வாங்கி கொடுத்து,  இரட்டை இலையையும் வாங்கி கொடுத்து, கொங்கு பெல்ட்ல்…  ஈரோடு சட்டமன்ற தேர்தலில் 66,000 வாக்கு வித்தியாசத்தில் தோக்குறாங்க என்றால் ? மக்கள் அவர்கள் பக்கம் இல்லை என்பது தான் அதோட அர்த்தம் என தெரிவித்தார்.