நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இருந்து 54 சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மரப்பாலம் கெபி அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.