சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் இடம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் பெரும்பாலான விபத்துக்கள் தமிழகத்தில் நிகழ்வதால் இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால் அவர்களும் பத்தாயிரம் ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும் என்ற கடும் விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்கள் அல்லது அசையும் சொத்துக்கள் நீதிமன்றங்கள் மூலமாக பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.