சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள மாநிலம் திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக பிப்ரவரி 26 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதில் திருச்சூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை – திருவனந்தபுரம் ரயில் பிப்ரவரி 25 பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more