சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள மாநிலம் திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக பிப்ரவரி 26 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதில் திருச்சூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.