மயிலாடுதுறை சோழம்பேட்டை பகுதியில் பருத்தி ரூ51 லட்சம் மதிப்பில் ஏலம் விடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை பகுதியில் வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் மூலமாக பருத்தியானது திறந்த வெளி கிடங்கில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் மயிலாடுதுறை பகுதியைச் சார்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது பருத்தி மூட்டைகளுடன் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 810 குவிண்டால் பருத்தி ரூ 51 லட்சத்துக்கு ஏலம் போனது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த ஏலம் நடைபெறும் என எனவும், பயன்பெற விரும்பும் விவசாயிகள் இதில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பெறப்படும் பணம் உரிய விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் மிக விரைவாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.