தூத்துக்குடியில் சொத்துக்காக சொந்தத் தாயை அடித்து துன்புறுத்திய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பணம் ஒரு மனிதனின் மனநிலையை எவ்வளவு மோசமாக மாற்றுகிறது என்பதற்கு பல சான்றுகளை நம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து வருகிறோம். பணத்திற்காக பல மோசடி வேலைகளில் ஈடுபடுவது, இரக்கமற்ற செயல்கள் பலவற்றை செய்வது என தங்களை அறியாமலேயே பல குற்ற சம்பவங்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும்,

குறிப்பாக சொத்து என வந்து விட்டால், வளர்த்த தாய் தந்தையரிடம் கூட பரிவு காட்ட விடாமல் இந்த பணம் கண்ணை மறைக்கிறது. அப்படி ஒரு சோகமான சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மெய்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த கோபால் ராமன் என்ற இளைஞர் தினமும் குடித்துவிட்டு தனது தாயாரிடம் சொத்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்த தகராறு முற்றவே பெற்று வளர்த்த தாய் என்று கூட பாராமல் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கோபால் ராமனின் தாயார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட, காவல்துறை அதிகாரிகள் கோபால் ராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு    வருகின்றனர்.