ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநாடு நடத்துவதற்கு செலவு செய்த அத்தனை கோடி நீ என்கிட்ட குடுத்தனு வச்சிக்க…  இந்திய லெவல்ல அருமை அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுடைய மாநாட்டை அருமையா நடத்தி, ஒரு வரலாற்று சாதனை… கின்னஸ் ரெகார்ட்….  படைக்க கூடிய ஆற்றல் உள்ளவர்கள் இங்க இருக்கோம். எங்களை எதிர்த்து உன்னால் என்ன பண்ண முடியும் ? 

அன்னைக்கி நாங்க மாநாடு நடத்தினோம். ஒரு குற்றம்,  குறை கூட சொல்லல. எப்படிப்பா  4 மணி வரைக்கும் கும்பலே வரல… 6 மணிக்கு மாநாடு திடல் நிரம்பிருச்சி…. வாகனங்கள் நிரம்பிருச்சி… வழியில காவல்துறை மறிச்சிருச்சி …  இவ்வளவு வாகனங்கள் எங்கிருந்துப்பா வந்துச்சி? எங்கிருந்துப்பா வந்துச்சி ? எப்படியா இதை ஏற்பாடு பண்ணீங்க ?  அப்படி கேக்குறது நம்ம மாநாடு…

எப்படியா இந்த சப்பாத்தி ரோல் குடுத்தீங்க… எப்படியா இந்த வாட்டர் பாட்டில் குடுத்தீங்க… போலீஸ் தடுமாறறாங்க. போலீஸ் என்ன என்னமோ சொல்லி பாத்தாங்க… காவல்துறையே வியக்குற அளவுல ஒரு சிறப்பான ஒரு மாநாடை நடத்தி காட்டிய  பெருமை நம் இயக்கத்திற்கு…. எங்களுடைய ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், துணை ஒருங்கிணைப்பாளருக்கும்,  ,கழகத்தினுடைய கொள்கை பரப்பு செயலாளர்களுக்கும் சாரும் என தெரிவித்தார்.