திருவண்ணாமலை மாவட்டம் அந்தனூரில் லாரியுடன் கார் மோதிய கோர விபத்தில் காரில் பயணித்த அனைவரும் பலியானதாக அண்மை தகவல் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்திரிப்பாளையம் பிரதான சாலையில் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு,  பெங்களூர் நோக்கி வந்த வந்த காரும்,  கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரானது அப்பளம் போல் நொறுங்கி காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 4 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலே உயிரிழந்ததாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த8 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

செங்கம் காவல்துறையினர் சடலங்கலை கைப்பற்றி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காரில் பயணம் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்த சூழ்நிலையில்,  அவர்கள் குறித்த முழு தகவல்களை தற்போது செங்கம் காவல்துறையினர் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாரியை ஒட்டி வந்த லாரி டிரைவர் தற்போது அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பிறகு அந்த காரில் பயணம் செய்தவர்கள் எந்த ஊரில் இருந்து வந்தார்கள் என்ற முழு தகவல் வெளியாகும்.