தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அக்டோபர் 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் என்ற திமுக அளித்த வாக்குறுதி பல குழப்பங்களுடன் அரைகுறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டது. தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கங்கைகொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், திருவள்ளூர் மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெவ்வேறு தேதிகளில் நடைபெறும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்