தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. மதுரை வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் இது தொடர்பாக பேசினார். அப்போது, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்ற வருகின்றது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து அங்கிருந்து ராக்கெட் ஏவப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.