தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவரிடம், சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், விதி படியும் சட்டம் படியும் அவைகள் நடைபெற்ற வருவதாகவும் விதிகளுக்கு புறம்பாகவோ எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் ஜெயக்குமார் சட்டமன்றத்திற்கு வராத காரணத்தால் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.