கன்சாஸ் நகரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மரியா தாமஸ் (26) என்ற தாய், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது ஒரு மாத பெண் குழந்தையைத் தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோவேவில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களை திகிலடையச் செய்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் நேரில் சென்ற அதிகாரிகள் , பலத்த தீக்காயங்களுடன் உயிரற்ற குழந்தையை கண்டுபிடித்தனர், குழந்தை உடல் கருகி, அணிந்திருந்த டயபர் கூட எரிந்துவிட்டது.

இதையடுத்து தாய் மீது வழக்கு பதிவு செய்து அவரை அதிகாரிகள் கைது செய்த நிலையில் மரியா குழந்தையை தூங்க வைப்பதற்காக தொட்டிலுக்கு பதிலாக மைக்ரோவேவில் தவறுதலாக வைத்ததாக அவரது தந்தை போலீசாரிடம் விளக்கம் கூறியுள்ளார். மேலும் மரியாவின் வக்கீல் அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறவே, தற்போது இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றத்தின் தீவிரம் நிரூபிக்கப்பட்டால், 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.