அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கன்சாஸ் நகரில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு மாத குழந்தையை தொட்டிலில் போடுவதற்கு பதிலாக மைக்ரோவேவில் வைத்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் சோதனை நடத்தியதில் உயிரிழந்த குழந்தைக்கு பலத்த தீக்காயங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். குழந்தையின் உடல் கருகிய நிலையிலும் குழந்தை அணிந்து இருந்த டயப்பர் எரிந்த நிலையில் இருந்துள்ளது.

வீட்டில் புகைந்த நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது, குழந்தையின் தாய் மரிய தாமஸ் என்பவர் இவ்வாறு செய்துள்ளார். இதனை அடுத்து தாயை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். குழந்தையின் தாத்தாவிடம் விசாரித்த பொழுது தன் குழந்தையை தூங்க வைப்பதற்காக தொட்டிலில் போடுவதற்கு பதிலாக மைக்ரோவேவ்வில் வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் மரிய தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 19 முதல் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.