கான்பூரைச் சேர்ந்த 25 வயதான சூரஜ் என்பவரை, அவரது மனைவி சரிதா பிளேடால் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 2-ம் தேதி சூரஜ் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரிதா எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் பிளேடால் தாக்கினார்.

சூரஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் உயிர் தப்பினார்.

“>

 

இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே சரிதா தன் கணவர் மீது இதுபோல கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அது குறித்து சூரஜ் முன்பே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.