செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதுநாள் வரைக்கும் பாஜக கூட்டணியில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிச்ச அதிமுகவுக்கு இஸ்லாமியருடைய வாக்கு ஒரு போதும் கிடைக்காது என திமுக கூட்டணியில இருக்க கூடிய இந்தியன் யூனியன் முஸ்லீம்,  மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்தது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

ADMKவை இஸ்லாமிய அமைப்பு SDPI சந்திச்சி இருக்காங்க. அவங்க உணர்ந்து தான் சந்திச்சி இருக்காங்க. அதனால் யார் நண்பன் ? யாரு எதிரி அப்படின்னு இஸ்லாமிய மக்களுக்கு தெரியும். திமுகவுடைய  தூண்டுதல் அடிப்படையில்  தான் சிலபேருடைய வாய் இருக்கு, அதுலாம் எடுபடபோறது கிடையாது.

அதுனால கண்டிப்பா இஸ்லாமிய மக்களுடைய வாக்குகள், கிஸ்தவ மக்களுடைய வாக்குகள்,  சிறுபான்மையின மக்கள் வாக்குகள் கண்டிப்பா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்,  எங்கள் தலைமைக்கான கூட்டணி கண்டிப்பா கிடைக்கும்.

இஸ்லாமிய மக்கள்,  கிறிஸ்துவ மக்கள், சிறுபான்மையின மக்கள் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்க  என்ன வியூகத்தை வகுக்க போறீங்க என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

இந்த மக்களுக்கு பாதுகாப்பு முக்கியம். அதை அவர்கள் உணர்ந்து இருகாங்க. அண்ணா திமுக ஆட்சியில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல. முதல்ல வாழக்கூடிய ஒரு உரிமை வேணும்.  அடுத்து சலுகை. அந்த  ரெண்டுமே  நாங்க தான கொடுத்து இருக்கோம் என தெரிவித்தார்.