தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். பங்காரு அடிகளார் உடலுக்கு அண்ணாமலை உட்பட பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் இன்று நடைபெற இருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ரத்து செய்யப்பட்டு 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தேதி மாற்றத்தை பாஜக நிர்வாகிகள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.