பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா பகுதியில் இரண்டு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை செயல்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடம் மரப்பலகை அதிகம் கொண்ட கட்டிடம் என்பதால் தீ மிகவும் வேகமாக பரவியது. இந்த கட்டிடத்தில் இருந்த 18 பேர்களில் மூன்று பேர் மட்டுமே பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பியுள்ளனர். மீதம் 15 பேரும் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும் அடங்குவார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீர் தீ விபத்து…. நெருப்பால் சூழ்ந்த கட்டிடம்…. 15 பேர் பலி…..!!
Related Posts
“திருமணமானாலும் வேறொருவருடன் உடலுறவு”…. இளைஞர்களிடையே டிரெண்டாகும் புதிய நட்பு திருமணம்….!!!
ஜப்பான் நாட்டில் இளைஞர்களிடையே திருமண உறவில் ஈடுபாடு இல்லாதது மற்றும் ரோபோக்கலுடன் குடும்பம் நடத்துவது போன்ற செயல்களால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.…
Read more2100ஆம் ஆண்டுக்குள் இமயமலையில் ஓர் அபாயம் இருக்கு…. வெளியான எச்சரிக்கை அறிக்கை…!!
இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை-2024, 2100ஆம் ஆண்டுக்குள் இமயமலைப் பனியில் 75 சதவீதம் உருகும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் பேரழிவுகள் ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more