பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா பகுதியில் இரண்டு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை செயல்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடம் மரப்பலகை அதிகம் கொண்ட கட்டிடம் என்பதால் தீ மிகவும் வேகமாக பரவியது. இந்த கட்டிடத்தில் இருந்த 18 பேர்களில் மூன்று பேர் மட்டுமே பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பியுள்ளனர். மீதம் 15 பேரும் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும் அடங்குவார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீர் தீ விபத்து…. நெருப்பால் சூழ்ந்த கட்டிடம்…. 15 பேர் பலி…..!!
Related Posts
1 இல்ல 2 இல்ல மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. எங்கு தெரியுமா…???
ஒரு குழந்தையை கருத்தரித்து வளர்ப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்கு நிறைய அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஒரு பெண் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ரஷ்யாவில் வசிக்கும் வாலண்டினா வாசிலியேல்…
Read moreநிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…
Read more