கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் அறுந்து துணி காயப்போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குமார் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!
Related Posts
ஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
Read moreஅண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read more