நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பிரம்ம கமலம் செடியில் பூக்கள் பூத்தது. இதனை அறிந்த பொதுமக்கள் பூவை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் ஆர்வத்துடன் பிரம்ம கமலம் பூவுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.