கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் அறுந்து துணி காயப்போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குமார் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!
Related Posts
வெள்ளியங்கிரி மலையில் எறிய பக்தர் மயங்கி விழுந்து மரணம்…. ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏழு மலைகளை தாண்டி செல்ல வேண்டும். இங்கு வருடம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் நேற்று புண்ணியகோடி (46) என்பவர்…
Read moreஅடக்கடவுளே…! ஊட்டியை கூட விட்டு வைக்காத வெயில்…. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவு…!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கோடை காலத்தில் வெப்பம்…
Read more