கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் அறுந்து துணி காயப்போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குமார் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!
Related Posts
கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!
சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…
Read more“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…
Read more