கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓசூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த வழியாக வந்த சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து டிப்பர் லாரி மீது மோதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேருந்துகளில் வந்த பயணிகளை மாற்று பேருந்துகள் மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
லாரி மீது அடுத்தடுத்து மோதிய சொகுசு பேருந்துகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more