கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓசூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த வழியாக வந்த சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து டிப்பர் லாரி மீது மோதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேருந்துகளில் வந்த பயணிகளை மாற்று பேருந்துகள் மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.