கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓசூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த வழியாக வந்த சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து டிப்பர் லாரி மீது மோதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேருந்துகளில் வந்த பயணிகளை மாற்று பேருந்துகள் மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
லாரி மீது அடுத்தடுத்து மோதிய சொகுசு பேருந்துகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…
Read more“நட்புக்கு துரோகம்”… நண்பனின் மனைவியுடன் தகாத உறவு…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குண்டு ரெட்டியூர் கிராமத்தில் காளிதாஸ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (35). இவர் லாரி ஓட்டுனராக…
Read more