உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் செல்லும் சாலையில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இதனை ஒட்டி உள்ள முக்கிய சாலையாக கருதப்படும் பத்ரிநாத் சாலையிலும் இந்த விரிசல் காணப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜோஷிமத் மற்றும் மார்வாடி இடையே பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய விரிசல் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இருந்த விரிசல்களும் பெரிதாகி வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.