வெற்றிமாறன் அடுத்து இயக்க உள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்தடுத்து திரைப்படங்களைத் தந்து வெற்றி இயக்குனராக மாறி இருக்கின்றார். இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் என நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கின்றார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் இடம் 3 கதை கூறியிருப்பதாகவும் அதற்கு ஜூனியர் என்டிஆர் ஓகே என கூறிவிட்டதாகவும் செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த கதைகளை இரண்டு பாகமாக எடுக்கப் போவதாக சொல்லப்படுகின்றது. முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் முதன்மை வேடத்திலும் இரண்டாம் பாகத்தில் தனுஷ் முதன்மை வேடத்திலும் நடிக்க இருக்கின்றாராம். ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை இல்லை என தெரியவில்லை. மேலும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை குறிப்பிடத்தக்கது.