வாரிசு-துணிவு பட மோதல்களுக்குப் பிறகு லியோ தனது ரிலீஸ் தேதியை அறிவித்து விட போட்டிக்கு சரியான படத்தை கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் அஜித். விக்னேஷ் சிவன் குறிப்பிட்ட நேரத்தில் கதையை முடிக்காததால் கதை கருவும் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதாலும் ஏகே 62 எடுக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. இதை அடுத்து மகிழ்த்திருமேனி அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல்-ஐ அஜித் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இரண்டு படங்கள் எடுக்க வேண்டியுள்ளதால் தற்போதைக்கு முடியாது என அவர் பதில் அளித்துள்ளார். எனினும் சில வருடங்கள் கழித்து படம் பண்ணலாம் என அஜித் கூறியதாக தகவல் வெளியாக ஏகே 63, ஏகே 64 ஆகிய படங்கள் கேஜிஎஃப் இயக்குனருடன் இருக்குமோ என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றது.