ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் கக்கரம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனிதநேய வாரவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒட்டப்பிடாரம் தாசில்தார் தலைமை தாங்க யூனியன் துணைத் தலைவர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாசில்தார் வரவேற்றார். இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அரசு சார்பாக தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இதன்பின் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை உள்ளிட்டவை கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தார்கள்.