பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் கோவை நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்குவதற்காக பில்லூரில் மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இதற்கான பணிகளை அவர் ஆய்விட்டார். மேலும் கட்டான்மழை பகுதியில் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகள் என பல்வேறு பணிகளை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அவருடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்பும் உடன் இருந்தார். பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகள் ஆனது ரூபாய் 780 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.