தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆறு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்தில் அடங்கிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்கள் நடந்து வருகின்றது. இதனால் குற்றவாளிகளை குற்ற செயல்களில் தடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் சத்தியசீலன், கஞ்சாமணி, இம்மானுவேல், சதாசிவம், ராஜேஷ் குமார், அஜித்குமார் உள்ளிட்ட ஆறு பேரின் தொடர் குற்ற நடவடிக்கையால் குண்டர்ச் சட்டத்தின் கீழ் போலீசார் அவர்களை கைது செய்தார்கள். மேலும் அவர்களை சிறையில் அடைத்தார்கள்.