திருவாரூரில் 2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி பின் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். இதன் பின் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதன்பின் 237 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இதையடுத்து முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக 7 பயனாளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாற்றத்தினாளி ஒருவருக்கு 9 ஆயிரத்து 50 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாயாருக்கு இலவச தையல் எந்திரம், 47 பேருக்கு 49 ஆயிரத்து 500 மதிப்பில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, விதவை உதவித்தொகைக்கான ஆணை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணை என 616 பேருக்கு 1 கோடியே 54 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 20 பேருக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரம், 5 பயனாளிகளுக்கு 29 ஆயிரத்து 250 மதிப்பிலான இலவச தையல் எந்திரம் என 705 பயனாளிகளுக்கு 2 கோடியே 6 லட்சத்து 9 ஆயிரத்து 915 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.