திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானமாக கிடைத்திருக்கின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில் உள்ளிட்டவையில் இருக்கும் அன்னதான உண்டியல்கள் சென்ற இரண்டு நாட்களாக எண்ணப்பட்டது.

இதற்கு கோவில் இணை ஆணையர் தலைமை தாங்க பொதுமக்கள் பிரதிநிதிகள், தூத்துக்குடி ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழு, கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டார்கள். இந்த அன்னதான உண்டியல் எண்ணப்படத்தில் மொத்தமாக ரூபாய் 28,23,641 வருமானமாக கிடைத்திருக்கின்றது.