பழனி கோவில் பாதயாத்திரை செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததற்காக இந்து முன்னணி துணைத் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக இரவு, பகலில் பாதுகாப்பு அளிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது.

இது வரவேற்க வேண்டியதாகும். இது போலவே தமிழகத்தில் இருக்கும் ஏராளமான இந்து கோவில்களுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றார்கள். அவர்களுக்கும் பழனி பாதயாத்திரையில் செல்பவர்களுக்கு போல பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.