காந்தாரா 2 திரைப்படத்தின் அப்டேட்டை வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் சென்ற வருடம் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.

தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருகின்றார் ரிஷப் ஷெட்டி. சென்ற இரண்டு மாதங்களாக தனது உதவியாளர்களுடன் கடலோர கர்நாடகா கடற்கரை சென்று படத்திற்கான ஆராய்ச்சி நடத்தினார். மேலும் படம் மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய தேவை இருப்பதால் முதல் கட்ட படபிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என அவர் திட்டமிட்டு இருக்கின்றார். மேலும் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியா முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். இத்திரைப்படம் சீக்குவலாக இல்லாமல் ப்ரீக்குவலாக இருக்கும் என்பதை அவர் தெரிவித்து இருக்கின்றார்.