கிழக்கு சீனாவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இருந்து 92 வயது மூதாட்டி ஒருவர், 2.15 மீட்டர் உயரமுள்ள இரும்புக் கதவை மிக லாவகமாக ஏறி குதித்துத் தப்பிச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த மூதாட்டி வெறும் 24 வினாடிகளில் கதவின் மீது ஏறி, அதன் மறுபுறம் பாதுகாப்பாகக் குதித்துச் சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

“>

 

இவ்வளவு வயதான காலத்தில் அவர் காட்டிய துணிச்சலும், உடல் வலிமையும் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.