ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சாதாரண தொண்டனாக இருந்த என்னை…  ஒரு வட்ட செயற்குழு உறுப்பினர்…. வட்ட செயற்குழு உறுப்பினராக  இருந்த என்னை…. வட்டக் கழகச் செயலாளர்,  வட்டக் கழக பிரதிநிதி, எம்ஜிஆர் இளைஞர் அணி  மாவட்ட செயலாளர், இளைஞர் அணி மாவட்ட கழக இணை செயலாளர்,  அதுக்கு அப்பறம் மாவட்ட கழக இணை செயலாளர்…

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்ல இருந்து   மாவட்ட கழக இணை செயலாளர் கட்சி பைலால கிடையாது. அன்னைக்கு அம்மா என்னை நியமிச்சாங்க. மாவட்ட கழக இணை செயலாளர். கட்சி தேர்தல் வந்தது மாவட்ட கழக பொருளாளருக்கு பிறகுநேர மாவட்ட கழக செயலாளர். புரட்சி தலைவி அம்மா தான் என்ன நியமிச்சாங்க. இந்த மாதிரி  தொடர்ந்து மாவட்ட கழக செயலாளரா 3 முறை இருந்தேன்… 

4வது முறையா… அருமை அண்ணன்…  எங்களுடைய சோழ மண்டல தளபதி என்னை மீண்டும்  மாவட்ட கழக செயலாளரா உருவாக்கினார். அதற்கு பிறகு 5வது  முறையாக இன்றைய தினம் நான் மாவட்ட கழக செயலாளராக தொடர்ந்து இருக்கின்றேன். கழக அமைப்பு  செயலாளராக தொடர்ந்து இருக்கின்றேன் என்றால் ? அதற்கு முழு காரணம் எங்கள் கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் அருமை அண்ணன் ஓபிஎஸ்.இந்த மாதிரி  தொடர்ந்து இத்தனை கார்டு, இவ்வளவு தியாகம்,  இவ்ளவு எல்லாம் பண்ணவங்க மேடையில அமர்ந்து இருக்கோம். நமக்கு முன்னாடி இதை விட தியாகம் பண்ண நீங்க உட்காந்து இருக்கீங்க…

இன்னைக்கு நமக்கு துரோகி பட்டம் குடுத்துட்டு…  கட்சியை விட்டு நிக்குறாராம் கபோதி பயலுக .. இதுக்கு ஒரு மாநாடு… மாநாடுன்னா எப்படி நடத்தணும்னு உங்களுக்கு தெரியுமா ? நீங்க செலவு பண்ணது பல நூறுகோடி என எல்லாருமே சொல்லுறாங்க. இதுக்கு ஒரு ED  ரைடு விடணும். ED ரெய்டு விட்டா விஷயம் எல்லாம்  தெரிஞ்சிரும். உன்னை உண்டு  இல்லனு பாத்துரலாம் என தெரிவித்தார்.